பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : முன்னாள் துணை சபாநாயகர் ஜெயராமன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவு

சென்னை :
பொள்ளாச்சியில் 2019 ஆம் ஆண்டு கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் மீது நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் அவற்றை பதிவு செய்த பரபரப்பான வழக்கு சமீபத்தில் முக்கிய முன்னேற்றத்தை கண்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 9 பேருக்கு கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில், இந்த வழக்குடன் தங்களை தொடர்புபடுத்தி அவதூறு கருத்துகள் வெளியிடப்பட்டதாக கூறி, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது மகன் பிரவீன் ஜெயராமன், சில யூடியூப் சேனல்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவதூறுகளுக்காக ரூ.1 கோடி மான நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை தொடர்ந்து பேசுவதற்கும் வீடியோக்கள் வெளியிடுவதற்கும் தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர்கள் மனுவில் கேட்டுள்ளனர்.

Exit mobile version