March 29, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சூலூர் அருகே 4 அடி உயர அம்மன் சிலையை புதரில் வீசிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்கள் – போலீசார் தீவிர விசாரணை!

by sowmiarajan
January 2, 2026
in News
A A
0
சூலூர் அருகே 4 அடி உயர அம்மன் சிலையை புதரில் வீசிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்கள் – போலீசார் தீவிர விசாரணை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி – அயோத்தியாபுரம் சாலையில் அமைந்துள்ள நீர் தேக்கத் தொட்டி அருகே, நேற்று இரவு மர்மமான முறையில் அம்மன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலை அணிந்திருந்த நபர்கள் சிலர் ஒரு வேனில் சிலையை எடுத்து வந்து புதரில் வீசிவிட்டுத் தப்பியோடியதால், இது ஏதேனும் கோயிலில் திருடப்பட்ட சிலையா அல்லது கடத்தல் கும்பலின் கைவரிசையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு பாப்பம்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு வேன் நின்றுகொண்டிருந்தது. அதில் கோயிலுக்கு மாலை அணிந்த சீருடையில் 6-க்கும் மேற்பட்ட நபர்கள் இருந்தனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் விசாரிக்கச் சென்றபோது, அந்த 6 பேரும் திடீரென வேனை அங்கேயே விட்டுவிட்டு இருட்டில் தப்பியோடினர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வேனைச் சுற்றிச் சோதனையிட்டபோது, அருகில் இருந்த புதர் மறைவில் சுமார் 4 அடி உயரம் கொண்ட நேர்த்தியான அம்மன் சிலை ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்தச் சிலையின் மீது மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்டு, அருகில் பிளாஸ்டிக் பாட்டில்களும் கிடந்தன. இது ஏதோ சடங்குகள் செய்யப்பட்டதற்கான அடையாளமாகத் தெரிகிறது.

மீட்கப்பட்ட அம்மன் சிலையை அருகில் உள்ள கோயிலில் வைத்து வழிபட ஊர் பொதுமக்கள் முயற்சி செய்தனர். இது குறித்த தகவல் கிடைத்தவுடன் சூலூர் வட்டாட்சியர் (தாசில்தார்) செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) உதயகுமார் மற்றும் சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கண்டெடுக்கப்பட்ட சிலை தொன்மையானதா அல்லது அண்மையில் செய்யப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். பின்னர் அந்தச் சிலையை முறையாக மீட்டு, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய அந்த 6 மர்ம நபர்கள் யார்? அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்ற விவரங்களைச் சேகரித்து வருகின்றனர். மேலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள கோயில்களில் அம்மன் சிலைகள் ஏதும் திருடுபோயுள்ளதா என்பது குறித்தும் தகவல் கோரப்பட்டுள்ளது. கைவிடப்பட்ட வேனின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நள்ளிரவில் அரங்கேறிய இந்தச் சம்பவத்தால் பாப்பம்பட்டி கிராமமே பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.

Tags: ammanidolincident mysteriousindividualssulur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழகத்தை நனைக்கும் ஜனவரி மழை வட சென்னையில் 11 செ.மீ. கொட்டித் தீர்ப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

Next Post

ஊட்டி தாவரவியல் பூங்காவில் இதய வடிவில் பூத்துக் குலுங்கும் ‘ஆந்தூரியம்’ மலர்கள் கண்ணாடி மாளிகையில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

Related Posts

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
News

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு
News

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்
News

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை
Bakthi

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026
Next Post
ஊட்டி தாவரவியல் பூங்காவில் இதய வடிவில் பூத்துக் குலுங்கும் ‘ஆந்தூரியம்’ மலர்கள் கண்ணாடி மாளிகையில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

ஊட்டி தாவரவியல் பூங்காவில் இதய வடிவில் பூத்துக் குலுங்கும் 'ஆந்தூரியம்' மலர்கள் கண்ணாடி மாளிகையில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மேட்டுப்பாளையம் குமரபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்  மாவட்ட அறங்காவலர் தொடங்கி வைத்தார்!

மேட்டுப்பாளையம் குமரபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்  மாவட்ட அறங்காவலர் தொடங்கி வைத்தார்!

January 8, 2026
பரமக்குடி பெருமாள் கோவிலில் நடன கோபால நாயகி சுவாமிகள் அவதார தின உற்ஸவம்: பஜனை கோஷ்டியுடன் வீதி உலா மற்றும் திருவிளக்கு பூஜை

பரமக்குடி பெருமாள் கோவிலில் நடன கோபால நாயகி சுவாமிகள் அவதார தின உற்ஸவம்: பஜனை கோஷ்டியுடன் வீதி உலா மற்றும் திருவிளக்கு பூஜை

January 3, 2026
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் வங்கி ஊழியர்கள் பிரம்மாண்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் வங்கி ஊழியர்கள் பிரம்மாண்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

December 31, 2025
யாருடைய பி-டீம் விஜய்? – நச்சுன்னு சொன்ன நைனார் நாகேந்திரன்

யாருடைய பி-டீம் விஜய்? – நச்சுன்னு சொன்ன நைனார் நாகேந்திரன்

December 18, 2025
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

0
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

0
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

0
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

0
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026

Recent News

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.