சிவகாசியில் 8 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், அசாமைச் சேர்ந்த மொஜம் அலிக்கு வழங்கப்பட்ட “சாகும்வரை சிறை” தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.
2020 ஆம் ஆண்டு சித்துராஜபுரம் பகுதியில் 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பட்டாசு ஆலை தொழிலாளியான அசாமைச் சேர்ந்த மொஜம் அலி கைது செய்யப்பட்டார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கொலை செய்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இவ்வழக்கில் 2023 ஆம் ஆண்டு போக்சோ நீதிமன்றம் மொஜம் அலிக்கு சாகும்வரை சிறை தண்டனை வழங்கியது. இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி மொஜம் அலி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இன்று இந்த மேல்முறையீடு குறித்து விசாரணை நடத்திய நீதிபதிகள், கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை முழுமையாக சரிபார்த்து, குற்றவாளி மீது சாகும்வரை சிறை தண்டனையை உறுதி செய்து மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தனர்.

















