March 24, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

எஸ்ஐஆர் பணிகளை ரத்து செய்ய வேண்டும் – அமைச்சர் ஐ.பெரியசாமி ஆவேசம்

by sowmiarajan
December 6, 2025
in News
A A
0
எஸ்ஐஆர் பணிகளை ரத்து செய்ய வேண்டும் – அமைச்சர் ஐ.பெரியசாமி ஆவேசம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திண்டுக்கல்லில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் 69வது நினைவு நாளை முன்னிட்டு, இன்று (06.12.25) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில், தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஐ. பெரியசாமி, வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மற்றும் ஆத்தூர் தொகுதியில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அமைச்சர் ஐ. பெரியசாமி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் எஸ்ஐஆர் (Special Intensive Revision) பணிகள் முறையாக நடைபெறவில்லை என்று குற்றம் சாட்டினார். “எஸ்ஐஆர் பணிகள் மிகவும் குளறுபடியாக உள்ளன. அவர்கள் எங்குமே சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கவில்லை. கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக மட்டுமே வேலை பார்த்து வருகின்றனர். எஸ்ஐஆர் பணிகள் முழுமையாகச் சரியாக நடைபெறவில்லை,” என்று அவர் தெரிவித்தார். ஆகையால், இந்தப் பணிகளை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். “சூப்பர் செக் (Super Check) மூலம் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கூறுவது தவறு. எந்த ஊரிலும் அவர்கள் ஆய்வு மேற்கொள்ளவில்லை,” என்று ஆட்சியரின் கூற்றையும் அவர் மறுத்தார்.

மேலும், பாலக்கனூத்து, நரிப்பட்டி, நீலமலைக்கோட்டை போன்ற பகுதிகளில் இறந்தவர்களைக்கூட வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.தனது சட்டமன்றத் தொகுதியான ஆத்தூரில் வாக்காளர் பட்டியலில் நடந்துள்ள குளறுபடிகள் குறித்து அமைச்சர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். “எனது ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஒரே இரவில் குடிபெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் எனக் கூறி 22,000 வாக்காளர்களை நீக்கி உள்ளனர்,” என்று அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.பிஎல்ஓ (Booth Level Officers) அதிகாரிகள் வாக்காளர்களைச் சேர்ப்பதற்காக வீடு வீடாகச் செல்லவில்லை என்றும், மாறாக, “அறையில் அமர்ந்து ஒரே இரவில் நீக்கி விட்டார்கள்” என்றும் அவர் குற்றம் சாட்டினார். முறையாகப் பூர்த்தி செய்து கொடுத்த விண்ணப்பங்களைக் கூட, குடிபெயர்ந்து விட்டனர் எனக் கூறி மாற்றிவிட்டதாக அவர் குறிப்பிட்டார். “இதுபோன்ற அதிசயம் ஆத்தூர் தொகுதியில் நடைபெற்றுள்ளது” என்றும் அவர் ஆவேசமாகக் கூறினார்.

திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது குறித்த கேள்விக்கு அமைச்சர் விளக்கமளித்தார். “திருப்பரங்குன்றம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. விரைவில் நல்ல தீர்ப்பு வரும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார். “மேல்முறையீடு செய்வது என்பது எங்களது அடிப்படை உரிமை. நீதிமன்றம் கொடுக்கக்கூடிய தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டம் இல்லை. சட்டமே சொல்கிறது, உங்களது உரிமைகளைப் பெறுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் முறையிடலாம் என கூறியுள்ளது. அதனால்தான் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளோம்,” என்று அவர் அரசின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து இதுவரை எந்தக் கருத்தும் கூறாதது ஏன் என்ற கேள்விக்கு அமைச்சர் ஐ. பெரியசாமி பதிலளித்தார்.இதுகுறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். அவர் அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெறவில்லை. அரசியல் கட்சியாக இருந்தால் கண்டிப்பாக கருத்து கூறுவார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.

Tags: administrative decisiongovernment stanceminister periyasamySIR work cancellationTamil Nadu news
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

டிசம்பர் 12-ல் மகளிர் உரிமைத்தொகை  அமைச்சர் சக்கரபாணி அதிரடி பேட்டி

Next Post

கொடைக்கானல் இந்திய கடற்படை தினம்: அரசுப் பள்ளியில் மாணவர்கள், விழிப்புணர்வு

Related Posts

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்
News

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்
News

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்
News

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்
News

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026
Next Post
கொடைக்கானல் இந்திய கடற்படை தினம்: அரசுப் பள்ளியில் மாணவர்கள், விழிப்புணர்வு

கொடைக்கானல் இந்திய கடற்படை தினம்: அரசுப் பள்ளியில் மாணவர்கள், விழிப்புணர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

February 12, 2026
கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

January 18, 2026
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  மேற்கு மாவட்ட ADMK அணி கண்டனஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  மேற்கு மாவட்ட ADMK அணி கண்டனஆர்ப்பாட்டம்

November 26, 2025
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் காவிரி துலாஉற்சவததை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம்

மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் காவிரி துலாஉற்சவததை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம்

November 15, 2025
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

0
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

0
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

0
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

0
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Recent News

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.