பா.ஜ.க மூத்த தலைவரும், மத்திய பிரதேச அமைச்சருமான கைலாஷ் விஜய்வர்கியா, பெண்கள் உடை குறித்து பேசி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கலில் சிக்குவது வழக்கம்.
பொது நிகழ்ச்சியில் கைலாஷ் விஜய்வர்கியா பேசியதாவது,
குறைவாகப் பேசும் தலைவர் நல்லவர் என்பது போல, குறைவான ஆடைகளை அணியும் பெண் மிகவும் அழகாகக் கருதப்படுகிறார். என்று ஒரு பழமொழி உண்டு.
ஆனால், நான் அதை ஏற்கவில்லை. ஒரு பெண் தெய்வத்தின் வடிவம் என நம்புகிறேன். மெல்லிய ஆடைகளை அணியும் பெண்களை கவர்ச்சிகரமானவர்களாக நான் பார்க்கவில்லை. சில நேரங்களில் பெண்கள் என்னுடன், ‘செல்பி’ எடுக்க வருவர்.
நான் அவர்களிடம், அடுத்த முறை சரியான உடையில் வாருங்கள், பின் புகைப்படம் எடுப்போம் என்று சொல்லி அனுப்புவேன்.