March 24, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மு.க.முத்து மறைவு : முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி – மதுரையிலிருந்து சென்னைக்கு விரைந்த கனிமொழி

by Priscilla
July 19, 2025
in News
A A
0
மு.க.முத்து மறைவு : முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி – மதுரையிலிருந்து சென்னைக்கு விரைந்த கனிமொழி
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் முதற்பிறந்த மகனும், திரைநடிப்பில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவருமான மு.க.முத்து இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு தமிழ்நாட்டுத் திரையுலகத்திற்கும், அரசியலுக்கும் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், குடும்பத்தினர், தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
முதலமைச்சரும், மு.க.முத்துவின் இளைய சகோதரருமான மு.க.ஸ்டாலின், அண்ணனுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோபாலபுரத்தில் உள்ள தந்தை கலைஞரின் இல்லத்தில் வைக்கப்பட்டது.

மாலை 5 மணிக்கு மு.க.முத்துவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர், பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், மதுரையில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று வந்த திமுக உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தன்னுடைய சகோதரர் மறைந்த செய்தியறிந்ததும், மாணவர்களுடன் மௌன அஞ்சலி செலுத்தி, உடனடியாக சென்னை புறப்பட்டு வந்தார்.

மு.க.முத்துவின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அதில்,

“முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க.முத்து மறைவுற்ற செய்தி இடியெனத் தாக்கியது. என்மீது தாய்-தந்தை போல பாசம் காட்டிய அன்பு அண்ணனை இழந்த துயரம் வலிக்கிறது. நாடகங்கள், திரைப்படங்கள், பாடல்கள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர். அவரது நடிப்பு, வசன உச்சரிப்பு, பாடல்கள் அனைத்தும் அவரை என்றும் மக்கள் நினைவில் வைத்திருக்கும். என் ஆருயிர் அண்ணனுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தனது இரங்கலில்,

“மு.க.முத்துவின் மறைவு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தை கலைஞரைப் போலவே திரைத்துறையில் சாதனை படைத்தவர். முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர், தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.

மு.க.முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’, ‘பூக்காரி’, ‘அணையா விளக்கு’ உள்ளிட்ட திரைப்படங்கள், அவரது தனித்துவமான நடிப்பையும், சொந்த குரலில் பாடிய பாட்டுகளும், தமிழ் சினிமா ரசிகர்களிடையே மறக்க முடியாத நினைவுகளாக இருக்கின்றன.

Tags: Chief Ministerkalaingerkanimozhimk muthumk stalinpassed away
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“பாஜகவுக்கு மோடி தேவை ; மோடிக்கு பாஜக தேவை அல்ல” – எம்.பி. நிஷிகாந்த் துபேவின் கருத்து அரசியல் பரப்புரையாக மாறியது !

Next Post

7 வருட வழக்கில் சீமான் உள்ளிட்ட 19 பேர் விடுதலை – திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு

Related Posts

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்
News

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்
News

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்
News

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்
News

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026
Next Post
7 வருட வழக்கில் சீமான் உள்ளிட்ட 19 பேர் விடுதலை – திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு

7 வருட வழக்கில் சீமான் உள்ளிட்ட 19 பேர் விடுதலை – திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

February 12, 2026
கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

January 18, 2026
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  மேற்கு மாவட்ட ADMK அணி கண்டனஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  மேற்கு மாவட்ட ADMK அணி கண்டனஆர்ப்பாட்டம்

November 26, 2025
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் காவிரி துலாஉற்சவததை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம்

மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் காவிரி துலாஉற்சவததை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம்

November 15, 2025
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

0
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

0
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

0
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

0
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Recent News

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.