தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாநகரம் 42-வது வார்டு அதிமுக சார்பில் பிரம்மாண்டமான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 42-வது வார்டு வட்டச் செயலாளர் கேட்டரிங் பாஸ்கர் இதற்கான சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். இந்த விழாவிற்குத் தலைமை தாங்கிய அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, அப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியதோடு, ஏழை எளிய குடும்பங்களுக்குத் தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி உரையாற்றினார். எடப்பாடியார் தலைமையிலான அதிமுக அரசு செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.யு.எஸ். சோமசுந்தரம், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி, இளைஞரணி இணைச் செயலாளர் செவிலிமேடு செல்வம் மற்றும் இளைஞர் அணி பொருளாளர் அய்யம்பேட்டை ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளான பழக்கடை தனசேகர், நூர்தின், அருள், மூர்த்தி, பச்சையப்பன், சங்கர், குமார், ஏழுமலை, ராஜி, சேகர், விஸ்வநாதன், மனோகர், ரோஸ், முனுசாமி, பழனி, செல்வம் மற்றும் ஷாகர் பாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். காஞ்சிபுரம் மாநகரின் பல்வேறு வார்டுகளிலிருந்தும் திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களால் விழா நடைபெற்ற பகுதி முழுவதும் மக்கள் வெள்ளமாகக் காட்சியளித்தது. ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு காஞ்சிபுரம் அதிமுகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.













