ட்யூக் பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பணியிடங்களில் பயன்படுத்துவதால், ஊழியர்களின் நம்பகத்தன்மை மற்றும் தொழில்முறை மதிப்பீடு பாதிக்கப்படுகிறதென வெளியானது.
பொதுவாக AI தொழில்நுட்பம் என்பது உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவுகிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், அதேவேளை, பணியாளர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய செயலாகவும் இது இருக்கக்கூடும் என ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
AI வளர்ச்சி மற்றும் அதன் சமூக விளைவுகள்
செயற்கை நுண்ணறிவு என்பது மனிதர்களின் வேலைசெய்யும் முறைமைகளை நுட்பமாக எளிமைப்படுத்தும் கணினி தொழில்நுட்பம். இது கடந்த ஆறு ஆண்டுகளில் பெருமளவில் வளர்ச்சி கண்டுள்ளது. மெக்கின்சி & கம்பெனி வெளியிட்ட 2024 அறிக்கையின் படி, AI பயன்பாடு 50% இலிருந்து 72% ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், AI தொழில்நுட்ப வளர்ச்சியும் 65% அளவில் வலுவடைந்துள்ளது.
பணியிடங்களில் AI – நன்மையா? தடையா?
AI தொழில்நுட்பம் வேலை விரைவாக முடிவடைவதற்கும், செயல்திறன் மேம்படுவதற்கும் உதவுகிறது. ஆனால், டியூக் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் படி, பணியாளர்கள் AI-ஐ பயன்படுத்தும் போது அவர்களின் தொழில்முறை சிந்தனை, கவனம் மற்றும் சுயதிறனை சந்தேகிப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகுகின்றன. இது நேரடியாக அவர்கள் நம்பகத்தன்மைக்கும் தாக்கமளிக்கிறது.
AI தொழில்நுட்பம் தளர்வு தரும் ஒரு கருவியாக இருந்தாலும், அதன் பணியிடப் பயன்பாட்டில் உள்ள சவால்களை நிராகரிக்க முடியாது. தொழில்முறை நம்பகத்தன்மை, ஊழியரின் தனித்திறன் போன்றவை கேள்விக்குள்ளாகும் நிலையில், நிறுவனங்கள் AI பயன்பாட்டில் நுணுக்கமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என ஆய்வாளர்கள் அறிவுறுத்துகிறார்கள்.