March 24, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்டதற்கு ஆதாரம் உள்ளதா?

by sowmiarajan
December 8, 2025
in News
A A
0
ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்டதற்கு ஆதாரம் உள்ளதா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மதுரை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உடையாளூரில் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மணிமண்டபம் கட்டக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, “ராஜராஜ சோழன் அங்குதான் அடக்கம் செய்யப்பட்டார் என்பதற்கான ஆதாரம் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பியதுடன், ஆதாரமில்லாததால் மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டது.

தஞ்சை அரண்பணி அறக்கட்டளையின் செயலாளர் தியாகராஜன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள உடையாளூரில் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடம் உள்ளது. அங்கு மாமன்னருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக அரசு மணிமண்டபம் கட்ட உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணையின்போது, உடையாளூரில் மனுதாரர் குறிப்பிட்டுள்ள இடம் கும்பகோணம் அருள்மிகு கைலாசநாதர் கோயிலுக்குச் சொந்தமானது என்று அதன் செயல் அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், “அந்த இடத்தில் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்டதற்கான எவ்விதமான ஆவணங்களும் இல்லை” என்றும் செயல் அலுவலர் தரப்பில் நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மனுதாரரிடம், “ராஜராஜ சோழன் அங்குதான் புதைக்கப்பட்டார் என்று மனுதாரர் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கக்கூடிய ஆவணங்கள் எதையும் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை” என்று குறிப்பிட்டனர்.

ஆவணங்கள் இல்லாததைக் கருத்தில் கொண்ட நீதிபதிகள், “ஆதாரங்கள் இல்லாத நிலையில், மனுதாரர் கோரும் நிவாரணத்தை (மணிமண்டபம் கட்ட உத்தரவிட) வழங்க இயலாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். அதே சமயம், “மறைந்த அரசர் ராஜராஜ சோழன் அங்குதான் அடக்கம் செய்யப்பட்டார் என்பதற்கான ஆவணங்களை மனுதாரர் எதிர்காலத்தில் சமர்ப்பித்தாலும், அது தொடர்பாக கொள்கை முடிவெடுக்க வேண்டியது தமிழக அரசே. நீதிமன்றம் அதில் தலையிட இயலாது” என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெளிவாகக் குறிப்பிட்டனர். இதையடுத்து, மணிமண்டபம் கட்டக் கோரிய இந்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்து உத்தரவிட்டது.

Tags: courtjudgerajarajacholantamilnadu newsthanjaur dist
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பழநி திருஆவினன்குடி கோயிலில் குடமுழுக்கு கோலாகலம்

Next Post

ஆன்மீகத்துக்கும் அரசுக்கும் இடைவெளி உண்டாக்க நினைக்கும் முயற்சி பலிக்காது: அமைச்சர் சேகர்பாபு

Related Posts

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்
News

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்
News

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்
News

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்
News

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026
Next Post
ஆன்மீகத்துக்கும் அரசுக்கும் இடைவெளி உண்டாக்க நினைக்கும் முயற்சி பலிக்காது: அமைச்சர் சேகர்பாபு

ஆன்மீகத்துக்கும் அரசுக்கும் இடைவெளி உண்டாக்க நினைக்கும் முயற்சி பலிக்காது: அமைச்சர் சேகர்பாபு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

February 12, 2026
கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

January 18, 2026
உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

January 4, 2026
விழுப்புரத்தில் ஆதரவற்றோர் & மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு காலமாக பல்வேறு நலத்திட்ட உதவி நெகிழ்ச்சி

விழுப்புரத்தில் ஆதரவற்றோர் & மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு காலமாக பல்வேறு நலத்திட்ட உதவி நெகிழ்ச்சி

December 19, 2025
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

0
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

0
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

0
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

0
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Recent News

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.