திடீரென இடிந்த இரும்புப் பாலம் : ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மக்கள்… 4 பேர் பரிதாப பலி !

புனே மாவட்டம் மாவல் தாலுகாவில் உள்ள பிரபல சுற்றுலா தலமான குண்ட்மாலாவின் இந்திரயாணி ஆற்றுப்பாலம் திடீரென இடிந்து விழுந்ததால், பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 51 பேர் படுகாயமடைந்துள்ளனர். 2 பேர் இதுவரை மாயமாகக் காணப்படுகிறார்கள்.

மே 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமானதால் பல சுற்றுலாப் பயணிகள் இந்திரயாணி பாலத்திற்கு வந்திருந்தனர். திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால், அதன் மீது நின்றிருந்த பயணிகள் நேரடியாக ஆற்றில் விழுந்தனர். அப்போது ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளப்பொங்கி ஓடிக் கொண்டிருந்தது.

மீட்பு நடவடிக்கைகள் தீவிரம் :
தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில காவல்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். தற்போது வரை 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 15 முதல் 20 பேர் வரை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணியில் சுமார் 250 பேர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஆற்றின் நீரோட்டம் மிக வேகமாக இருப்பதால், மீட்பு நடவடிக்கைகள் கடினமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதலமைச்சர் மற்றும் பிரதமர் நடவடிக்கை :
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூபாய் 5 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பவ நிலை குறித்து விசாரித்ததாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்த பாலம் பற்றி கடந்த காலங்களிலேயே பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக பொதுமக்கள் புலம்பியுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இது புதுப்பிக்கப்பட்டதாகவும், எனினும் போதிய பராமரிப்பு இல்லாததால் இவ்வாறான பேரழிவுக்கு வழிவகுத்ததாகவும் கூறப்படுகிறது.

அதிகாரிகள் தெரிவித்ததின்படி, அதிநீளமாக மக்கள் பாலத்தின் மீது குவிந்ததுதான் இந்த இடிபாடுக்கான முக்கிய காரணம் என்று கூறினர்.

Exit mobile version