விஜய்யை தேர்தல் நேரத்தில் கவனித்துக் கொள்கிறேன் – வேல்முருகன்

அது என்ன தமிழிலும்… எனக்கும் சேகர்பாபுக்கும் சட்டமன்றத்தில் இன்றைக்கும் அதற்கு தான் சண்டை… விஜய்யை தேர்தல் நேரத்தில் கவனித்துக் கொள்கிறேன். திருவாரூரில் தமிழக வாழ்வு கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் அதிரடி பேச்சு

திருவாரூர் தேரடி அருகில்தமிழர் கூட்டமைப்பு மற்றும் காரைக்கால் மக்கள் கூட்டணி தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணையும் பொதுக்கூட்டம் தமிழக வாழ்வு உரிமை கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.

இதில் பல்வேறு கட்சிகளில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வு உரிமைக் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.இந்த கூட்டத்தில் வேல்முருகன் பேசியதாவது.

இன்றைக்கும் எனக்கும் சேகர்பாபுவுக்கும் சட்டமன்றத்தில் சண்டை.எதுக்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்.என்ன தமிழ்நாட்டில் என் தாய் மொழியில் அர்ச்சனை செய்யப்படாமல் அது என்ன தமிழிலும் இதைத்தான் கலைஞரிடம் நான் எதிர்த்து கேட்டேன்.

கலைஞரே அது என்ன தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்று இருக்கு இந்த பெயர் பலகையை தூக்குங்க.தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்கிற பெயர் பலகையை கொண்டு வாங்க என்று சட்டம் கொண்டு வந்தவன் வேல்முருகன்.

சேகர் பாபு அவர்களே இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அவர்களே இந்த கூட்டத்தில் இருந்து வேல்முருகன் வைத்த கோரிக்கையை ஏற்று தலைவர் கலைஞர் அவர்களுடைய அரசாணை தமிழில் அர்ச்சனை செய்யப்படும் தமிழில் குடமுழுக்கு நடைபெறும் தமிழில் நன்னீராட்டு நடத்தப்படும் என்கிற அறிவிப்பு தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2011 வரையில் நான் பேசிய பதிவு இருக்கிறது.அதனை நடைமுறைப்படுத்துங்கள் மாண்புமிகு சேகர் பாபு அவர்களே.

அன்று முதலமைச்சர் கலைஞர் கொடுத்தார்.தமிழிலும் என்பது தூக்கப்பட்டு தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று.இன்று தமிழ் அர்ச்சனை மொழியாக இருக்கிறதா அலுவல் மொழியாக இருக்கிறதா. சுதந்திரம் வாங்கிய 75 ஆண்டுகளில் இந்த வேல்முருகன் கரடியாக கத்திய பிறகு தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தான் தமிழ்நாட்டில் அரசு கோப்புகள் அனைத்தும் தமிழிலே கையொப்பமிட வேண்டும் தமிழில் இருக்க வேண்டும் என்று சுற்றறிக்கையை அனுப்பினார். அதற்கு காரணம் வேல்முருகன்.

ஆனால் அதையெல்லாம் தெரியாத தற்குறிகள் இன்று தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்திற்கு வருவோம். வாங்க உங்க அப்பா பாட்டன் எல்லாம் பார்த்தவங்க நாங்க .தேர்தல் களத்தில் சந்திப்போம்.இப்போது நாகரிகம் கருதி நாங்கள் கடந்து போகிறோம்.

பநேரா செயின்ட் சார்ஜ் கோட்டை தான் போவ அடிபடுபவன் ஒருவன் போராடுகிறவன் ஒருவன் ஜெயிலுக்கு போறவன் ஒருத்தன் இந்த நாட்டிலே அப்பழுக்கற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர் சுதந்திர இந்தியாவில் 10 ஆண்டுகள் சிறை சென்ற நல்ல கண்ணுவை இந்த நாட்டில் யார் நல்ல நல்ல கண்ணு நொள்ள கண்ணு ஏன்டா அவரை விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியுமா அந்த தலைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்கள்.

தொலைக்காட்சியில் உட்கார்ந்து கொண்டு யூடியூபில் உட்கார்ந்து கொண்டு அசிங்க அசிங்கமாக படுக்கையறை காட்சியை பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்க்கின்ற ஈன காட்சிகளை சிறிய குழந்தைகளோடு ஒப்பிட்டு இதான் சாக்கு வேல்முருகை ஏறி அடிக்கலாம் என்று போங்கடா அடிங்க தேர்தல் வரட்டும் தமிழ் சமூகத்தினுடைய வாழ்வுரிமை பிரச்சினைகளை சிக்கல்களை இந்த இந்த நிலத்தில் ஏற்படுகின்ற பேர் அபாயத்தை இந்த மண்ணையும் மக்களையும் காப்பாற்ற எந்த வித தியாகத்தையும் வேல்முருகன் செய்ய தயாராக இருக்கிறான்.

நான் பிறக்கும் போது எம்எல்ஏ ஆக வேண்டும் என்று பிறக்கவில்லை மூன்று முறை எம்எல்ஏவாக ஆவேன்என்று நினைக்கவில்லை இந்த கட்சி தமிழ்நாடு முழுவதும் வேகமாக வளர்கிறது என்று நினைக்கவில்லை. இன்றைக்கும் இந்த அரசியல் கட்சி ஜனநாயகம மாண்போடு இரண்டாம் கட்டத் தலைவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தோழர் தமிழரசன் பாணியில் அநியாயம் அக்கிரமத்தில் நபர்களை நடு ரோட்டில் வைத்து தண்டனை கொடுக்க வேண்டும் என்பத என் உள்ளார்ந்த ஆவல்.

இருப்பினும் சட்டத்தின் பால் உறுதிமொழி எடுத்து விட்டோமே பல்லை கடித்துக் கொண்டிருக்கிறோம். பதவிக்காக பல் இழித்து கொண்டிருக்கிற கூட்டம் மட்டும் என்னிடம் இல்லை.பதவியை தூக்கி எறிந்து விட்டு தமிழ் சமூகத்தின் வாழ்வுரிமைக்கான அரசியல் செய்வதற்கான விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழ் தேசிய போராளிகள் என்னிடம் இருக்கிறார்கள் என்று பேசினார்.

Exit mobile version