“தினமும் மகளோடு பேசுகிறேன், பழகுகிறேன்…” – மறைந்த மகள் குறித்து விஜய் ஆண்டனி

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர், நடிகர் மற்றும் இயக்குனர் விஜய் ஆண்டனி, இந்த வாரம் வெளியான தனது படம் சக்தித் திருமகன் பற்றிய புரமோஷன் பேட்டியில் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

பேட்டியில் “வாழ்க்கையில் எந்த பிரச்சனையிலும் மீண்டு வர என்ன தேவை?” என்ற கேள்விக்கு பதிலளித்த இவர், மறைந்த தன் மகளின் நினைவில் இருந்து எப்படி மீண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்தினார். விஜய் ஆண்டனி கூறியதாவது, “என்னை உண்மையில் ஆட்டிப்பார்க்கும் விஷயங்கள் தனிப்பட்ட விஷயங்கள்தான். எவ்வளவு ஏற்றம், இறக்கம் வந்தாலும் அதைக் கையாள முடியும். தனிப்பட்ட விஷயங்களை தனியாக சமாளிக்கும் தன்னம்பிக்கை முக்கியம்.”

மகளின் மறைவின் பின்னரும் சந்தோஷமாக வாழ்கிறார் என்பதை தெரிவிக்க, விஜய் ஆண்டனி கூறினார், “இப்போதும் தினமும் என் மகளோடு பேசுகிறேன், பழகுகிறேன், காமெடிகள் செய்கிறேன். அவள் நினைவுகளைப் பகிரும் போது யாரும் அனுதாபப்பட வேண்டாம். எனக்கு இழப்பு இல்லை.”

Exit mobile version