சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, சென்னையில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, பதிவுமூப்பு இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இன்று எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அனைவரையும், போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, நேற்று போராட்டம் நடத்திய ஆசிரியர்கள், ஆயிரத்து 500 பேர் மீது, 3 பிரிவுகளின் கீழ், நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
