திருடவும் முடியல , திண்ணு செரிக்கவும் முடியல – கிண்டலடித்த முதல்வர் ஸ்டாலின்

பெரியார் எனும் பெருஞ்சூரியனை திருடவும் முடியாமல் தின்று செரிக்கவும் முடியாமல் திண்டாடும் பகைவர் கூட்டத்தின் வஞ்சக எண்ணங்களை வீழ்த்திட, ஒற்றுமை உணர்வோடு ஓரணியில் தமிழ்நாடு நின்றால், என்றும் வெற்றி நமதே என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் 52-வது நினைவுநாளை ஒட்டி, முதலமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வளைந்து நின்ற முதுகுகள் தலைநிமிர்ந்து தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்கு தந்தவர் பெரியார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழர்கள் தலைகுனியாமல், ஆதிக்கத்திற்கு அடிபணியாமல், பகுத்தறிவுச் சிந்தனையோடு சம மனிதரை நேசித்துச் சமத்துவத்தை பேணுவதே, அவர் உழைத்த உழைப்புக்கு நாம் செலுத்தும் நன்றி என்று கூறியுள்ளார்.

பெரியாரை செரிக்க முடியாமல் திண்டாடும் பகைவர் கூட்டத்தின் வஞ்சக எண்ணங்களை வீழ்த்திட ஒற்றுமை உணர்வோடு ஓரணியில் நின்றால் என்றும் வெற்றி நமதே என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version