ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் ஒரே நாளில் 2 முறை உயர்ந்து, சவரன் 92 ஆயிரம் ரூபாயாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வெள்ளி விலையும் வரலாறு காணாத அளவிற்கு ஏறியுள்ளது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை தினசரி 2 முறை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று காலையில், சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் 600 ரூபாய் அதிகரித்தது.
இதன்படி, இன்று ஒரு கிராம் தங்கம் 155 ரூபாய் அதிகரித்து 11 ஆயிரத்து 500 ரூபாயாகவும், சவரனுக்கு ஆயிரத்து 280 ரூபாய் உயர்ந்து, 92 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து, 190 ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளி, ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.