பொருளாதாரத்திற்கான 2025ஆம் ஆண்டு நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் வரிசையாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக மருத்துவம், இலக்கியம், அமைதி உள்ளிட்டத் துறைகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
புதுமைகள் அடங்கிய பொருளாதார வளர்ச்சி தொடர்பான ஆய்வுக்காக மூன்று பொருளாதார அறிஞர்களுக்கு 2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த ஜோயல் மோக்கீர், பீட்டர் ஹோவிட் ஆகிய இருவருக்கும், யு.கேவைச் சேர்ந்த பிலிப்பே அகியோன் என்பவருக்கும் சேர்த்து நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.