ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை, மாலை என இருவேளையும் அதிகரித்து, சவரன் மீண்டும் 92 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது.
அண்மைக் காலமாக ஆபரண தங்கத்தின் விலையில், ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது. பங்குச் சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களே இதற்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை சவரனுக்கு 880 ரூபாயும், மாலை 560 ரூபாயும் விலை உயர்ந்தது.
இதனால், ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரத்து 440 ரூபாய் அதிகரித்து, 91 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், ஒரு கிராம் 11 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்திருக்கிறது. வெள்ளி ஒரு கிராம் 167 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, ஒரு லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
