மணிக்கு 896 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும், உலகின் அதிவேக புல்லட் ரயிலின் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தி, சீனா புதிய சாதனை படைத்துள்ளது.
போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான் உள்ளிட்டவை அதிவேக புல்லட் ரயில்களை இயக்கி வருகின்றன. ஜப்பானின் எல்.ஓ., சீரிஸ் மாக்லேவ் ரயில் மணிக்கு 603 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து சாதனை படைத்திருந்தது. அதனை முறியடிக்கும் வகையில், மணிக்கு 896 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக்கூடிய சி.ஆர்- 450 என்று பெயரிடப்பட்ட ரயிலை சீனா உருவாக்கியுள்ளது.
அந்த ரயில் சீனாவின், ஷாங்காய் – செங்டு வழித்தடத்தில் இயக்கப்பட இருக்கிறது. இந்த புல்லட் ரயிலில், தொழில்நுட்ப ரீதியில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரயில் எஞ்சினின் முனைப் பகுதி பருந்து அலகு போன்ற ஏரோடைனமிக் வடிவத்தில் 45 அடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வேகத்தை மேம்படுத்த, ரயிலின் ஒட்டுமொத்த காற்று எதிர்ப்பை 22 சதவீதம் குறைத்துள்ளனர். இந்த ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
