சிவபுரியில் கொடூர விபத்து : கலைஞர்கள் உயிரிழப்பு, பலர் படுகாயம்

மத்திய பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில், குஜராத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் 4 பேர் உயிரிழந்தும், 11 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர்.

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த இசைக்குழுவினரை ஏற்றிச் சென்ற மினி பஸ், அதிகாலை 5.30 மணியளவில் எதிரே வந்த லாரியுடன் மோதியது. தகவல் அறிந்ததும், மீட்பு படையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விசாரணையில், பஸ்சின் டிரைவர் தூக்க கலக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது என தெரியவந்துள்ளது. இதில், ஹார்திக் டேவ், ராஜா தாக்கூர், அங்கித் தாக்கூர், ராஜேந்திர சோலங்கி ஆகிய நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காயமடைந்த 11 பேரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம், இரவு நேரமும் அதிகாலை நேரங்களிலும் வாகனம் ஓட்டும் போது தூக்க கலக்கத்தால் ஏற்படும் அபாயங்களை மீண்டும் ஒருமுறை வெளிக்கொணர்கிறது.

Exit mobile version