- பா.ம.க.,வை பலவீனப்படுத்த தி.மு.க., முயற்சி செய்கிறது என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
- கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
- இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது பெற்ற பிறகு பிரதமர் மோடி தெரிவித்தார்.
- ‘மருத்துவப் பணியாளர்களை போதிய அளவில் நியமிக்க வேண்டிய தமிழக அரசு, அதைச் செய்யாமல் வீண் விளம்பரங்களிலும், பொய்ப்பரப்புரைகளிலும் மட்டும் தான் ஈடுபட்டு வருகிறது,’ என்று பா.ம.க., செயல் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
- திருவள்ளூர் அருகே சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் நேரில் ஆஜராக சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- ”அரைவேக்காட்டு தனமாக அறிக்கை விடுகிறார் இ.பி.எஸ்., ” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இதற்கு, ” வாய்க்கு வந்த ரீல்களை முதல்வர் ஸ்டாலின் அளந்து விடுகிறார் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பதிலடி கொடுத்துள்ளார்.
- ”குடும்ப கட்டுப்பாடு செய்த காரணத்தினால், தமிழகத்திற்கு ஒரு ஆபத்து வந்து இருக்கிறது. பார்லிமென்டில் தமிழக தொகுதிகள் குறையும் நிலை வந்து இருக்கிறது” என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
- சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.
- எரிபொருள் தீர்ந்து போனதால், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய பிரிட்டிஷ் போர் விமானத்தின் பைலட், ‘இங்கேயே தான் இருப்பேன்’ என்று விடாப்பிடியாக, விமானம் அருகிலேயே நாற்காலி போட்டு அமர்ந்திருந்திருந்தார்.
- காசா உதவி மையத்தின் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனியர்கள் 38 பேர் கொல்லப்பட்டனர்.
- அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலக ஈரான் முடிவு செய்துள்ளது.