பெற்றோரை கொன்ற மகன் மீது குண்டாஸ் சட்டம்

ஈரோடு : சொத்து பிரச்னையில் தந்தை மற்றும் தாயை அடுத்தடுத்து கொலை செய்த மகன் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்துள்ளது.

ஈரோடு அருகே நஞ்சனாபுரம் வேப்பம்பாளையத்தைச் சேர்ந்த பழனிசாமியின் மகன் ரவிக்குமார் (38), பெற்றோருக்கு ஒரே மகனாக இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு சொத்து தொடர்பான தகராறில் தந்தையை கொலை செய்த வழக்கில் சிறை சென்றார். பின்னர் ஜாமினில் வெளிவந்த அவர், சமீபத்தில் மீண்டும் சொத்து பிரச்னையால் தாயையும் கொலை செய்தார்.

இந்த சம்பவத்தையடுத்து ஈரோடு தாலுகா போலீசார் அவரை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர்மீது குண்டர் சட்டம் அமல்படுத்த வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைத்தார். அதை கலெக்டர் ஏற்றுக் கொண்டதால், ரவிக்குமார்மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

Exit mobile version