முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன்

ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

சட்டவிரோதமாக செயல்பட்டதாகக் கூறப்படும் பிரபல ஆன்லைன் சூதாட்ட செயலி மூலம், கோடிக்கணக்கான நிதி முறைகேடுகள் மற்றும் சூதாட்ட நடவடிக்கைகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து, அந்த செயலியை விளம்பரப்படுத்திய பிரபல நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டக்குபதி, விஜய் தேவரகொண்டா, நிதி அகர்வால், பிரணிதா உள்ளிட்ட 25 பேருக்கு எதிராக தெலங்கானா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதே வழக்கில், இந்த செயலியின் பிராண்ட் தூதராக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக, இந்திய அணியின் மற்றொரு முன்னாள் வீரர் ஷிகர் தவானும் விளம்பரத் தொடர்பாக விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறையால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version