பாஜகவுடன் பி.ஆர்.எஸ். கட்சியை இணைக்க சதி : சந்திரசேகர ராவ் மகள் கவிதா பகீர் குற்றச்சாட்டு !

ஹைதராபாத் : பி.ஆர்.எஸ். கட்சியை தேசிய அரசியலில் துணையாக பயன்படுத்த பாஜகவில் சதி நடைபெற்று வருகிறது எனக் கட்சித் தலைவர் சந்திரசேகர ராவின் மகளும், முன்னாள் எம்.பியுமான கே.கவிதா குற்றம்சாட்டியுள்ளார்.

தெலங்கானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசும் போது, “பி.ஆர்.எஸ். கட்சி எப்போதும் தனித்துப் செயல்படும் கட்சியே. பாஜகவுடன் எங்களுக்குள் எந்தவிதமான உடன்பாடும் இல்லை. எனவே, இதுபோன்ற தவறான செய்திகள் மீது மக்கள் நம்பிக்கை வைக்கக்கூடாது,” என கவிதா வலியுறுத்தினார்.

மேலும், “பி.ஆர்.எஸ். கட்சியை இணைக்க சிலர் திட்டமிட்ட சதியை நடத்தியுள்ளனர். ஆனால் நான் ஒரு பொழுதும் இதை ஒப்புக்கொள்ளப்போவதில்லை,” எனவும் கூறினார்.

இந்நிலையில், சமீபத்தில் சந்திரசேகர ராவை சாத்தான்கள் சூழ்ந்திருப்பதாகக் கவிதா எழுதிய கடிதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலத்தில் டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கவிதா கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version