கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் இந்தியா அதிகாரபூர்வ பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்தித்து இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்தும் வழிகளைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதற்கு முன்பு, அனிதா ஆனந்த் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து விவாதித்தார். இந்த சந்திப்பில் இரு நாடுகளின் முக்கிய அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அந்த சந்திப்பின் போது, அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது, வணிகம், முதலீடு, வேளாண்மை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சிவில் அணுசக்தி, ஏஐ, முக்கிய கனிமங்கள் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா-கனடா நாடுகள் இணைந்து செயல்படுவதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அனிதா ஆனந்த் பேசியதாவது, “இந்தியாவுக்கு வரவேற்பு அளித்ததைக்கு நன்றி. இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியை வரவேற்ற நிகழ்வு இன்றைய பேச்சுவார்த்தைக்கு ஒரு அடித்தளமாக உள்ளது” என்றார்.

பேச்சுவார்த்தைகள் மற்றும் கூட்ட அறிக்கைகள், இரு நாடுகளின் பரஸ்பர திட்டங்களை விரிவாக விவரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதையும் அனிதா ஆனந்த் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, அனிதா ஆனந்த் பிரதமர் மோடியை சந்தித்து வரவேற்பு பெற்றார். பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “அவரது வருகை இரு நாடுகளின் உறவில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும்” என்றும், வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் இணைந்து பணியாற்ற விரும்புவதாக பிரதமர் தெரிவித்தார்.

Exit mobile version