கரூர் அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப்கார் சேவை 48 நாட்களுக்கு பின்னர் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் கடல் மட்டத்திலிருந்து 1071 அடி உயரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
மலை உச்சியில் உள்ள சிவனை தரிசனம் செய்வதற்காக வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சென்று வருவதற்காக ரோப் கார் வசதி அமைக்கப்பட்டுள்ளது.
















