அகமதாபாத்  விமான விபத்து : ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்து நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்தில் உயிரிழப்புகள் மற்றும் பலர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஆமதாபாத்தில் நடந்த துயரமான விபத்து குறித்து அறிந்து மிகவும் துயரமடைந்தேன். இது மனதை உடைக்கும் பேரழிவு. பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். விவரிக்க முடியாத இந்த சோகமான நேரத்தில், அவர்களுடன் தேசம் துணை நிற்கிறது” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது அறிக்கையில்,

“ஆமதாபாத் துயரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இது மனதை நொறுக்குகிறது. இந்த சோகமான நேரத்தில், பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. அவர்களுக்கு தேவையான உதவிகளை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அளிக்க வேண்டுமென நான் உத்தரவிட்டுள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Exit mobile version