“நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” – அக்னி நட்சத்திரம்

தமிழ்நாட்டில் சுடச்சுட வெயிலைத் தூக்கி வரும் ‘அக்னி நட்சத்திரம்’ காலம் (கத்திரி வெயில்) இன்று, மே 4ஆம் தேதி தொடங்கியுள்ளது. 28ஆம் தேதி வரை நீடிக்கும் இந்த காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கின்றது.

முதலிலிருந்தே வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது வெயிலின் உச்சக் கட்டமாகக் கருதப்படும் இந்த 25 நாட்களில் மக்கள் அதிக சோகத்தையும், உடல்நல பிரச்னைகளையும் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகலாம்.

வெப்பத்தின் உச்ச நிலை 21வது நாளில்

அக்னி நட்சத்திரத்தின் முதல் 7 நாட்களில் வெப்பம் கூடி வரும்; 21வது நாளில் உச்சத்தை அடையும். பிறகு மெதுவாக குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலத்தில் அதிக வெப்பம் காரணமாக, வெப்பச் சோர்வு, பக்கவாதம் போன்ற உடல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எச்சரிக்கை – வெயில் 100 டிகிரியை கடந்த 11 இடங்கள்

நேற்றைய தினம் மட்டும் தமிழகத்தில் 11 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியது.

மழையும் வரலாம்…

வெப்பம் மெருகேறும் நிலையில், சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மக்களுக்கு ஆலோசனைகள்

Exit mobile version