ஐ.ஆர்.சி.டி.சி. எனப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் நிறுவனம் பயணியருக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகின்றது. இதில் பயணிகள், ஒரு நாளுக்கு முன்னதாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தட்கல் முறை இருந்து வருகின்றது.
இந்த தட்கல் முறையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் பாதிப்புக்குள்ளாவதாகவும், தொழில்நுட்ப குறைபாடுகளை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் வந்தபடி இருந்தது.
தினமும் காலை 10 மணிக்கே தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய காத்திருந்தாலும் கிட்டத்தட்ட 90 சதவீத பயணிகளுக்கு இணையதளம் வேலை செய்யவில்லை என புகார் எழுந்தது. இதனால் தட்கல் டிக்கெட் மோசடி தொடர்பாக 2.5 கோடி போலி கணக்குகளை கண்டறிந்து ஐ.ஆர்.சி.டி.சி., நீக்கி இருக்கிறது.
இப்படி இருக்கும் நிலையில், திடீர் பயணத்திற்கு எளிதில் ரயில் டிக்கெட் பெறும் வகையில், விரைவில் இ-ஆதார் மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகமாவுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.