இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநாட்டி வரும் ரியல்மி இந்தியா நிறுவனம், இளைஞர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் தனது ‘P’ சீரிஸ் வரிசையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 10,001mAh திறன் கொண்ட உலகின் சக்திவாய்ந்த ‘டைட்டன்’ பேட்டரியுடன் கூடிய ‘ரியல்மி P4 பவர் 5G’ ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. நீடித்த பேட்டரி ஆயுள் மட்டுமல்லாமல், 80W வேக சார்ஜிங் வசதி மற்றும் பிற சாதனங்களை சார்ஜ் செய்ய உதவும் 27W ரிவர்ஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் எனப் பேட்டரி பிரிவில் இந்த போன் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப ரீதியாக இந்த போன் 7400 அல்ட்ரா 5G சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், 144Hz ஹைப்பர்-க்ளோ 4D கர்வ் அமோலெட் டிஸ்ப்ளே (Hyper-Glow 4D Curve AMOLED Display) வழங்கப்பட்டுள்ளதால், கேமிங் மற்றும் வீடியோ அனுபவம் மிகவும் தத்ரூபமாக இருக்கும். ‘ஜென் இசட்’ (Gen Z) தலைமுறை இளைஞர்களின் ரசனையை உணர்ந்து, பேர்ல் அகாடமியுடன் இணைந்து வெளிப்படையான (Transparent Aesthetics) வடிவமைப்பில் இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பைப் பொறுத்தவரை IP68, IP69 மற்றும் IP66 ஆகிய தரநிலைகளுடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஆடியோ பிரியர்களுக்காக 400 சதவீத அல்ட்ரா-பூம் ஹை-வால்யூம் ஸ்பீக்கர்கள் மற்றும் ரியல்மி யுஐ 7.0 இயங்குதளம் என ஒரு முழுமையான பிளாக்ஷிப் அனுபவத்தை இது வழங்குகிறது.
இந்த மெகா அறிமுகத்துடன், ரியல்மி தனது புதிய துணை சாதனங்களையும் சந்தைக்குக் கொண்டு வந்துள்ளது. வெறும் 5.3 கிராம் எடையுள்ள ‘ரியல்மி பட்ஸ் கிளிப்’, 11 மிமீ டூயல் டிரைவர் மற்றும் ஏஐ ஈஎன்சி (AI ENC) கால் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியுடன் கிடைக்கிறது. அதேபோல், 20,000mAh திறன் கொண்ட ‘ரியல்மி டெக்லைப் 45W கேபிள்டு பவர் பேங்க்’ சாதனமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று அவுட்புட் போர்ட்கள் மற்றும் 3D டிரான்ஸ்பரன்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. விலையைப் பொறுத்தவரை ரியல்மி P4 பவர் 5G ஸ்மார்ட்போன் ரூ. 23,999 முதல் விற்பனைக்கு வருகிறது. ரியல்மி பட்ஸ் கிளிப் ரூ. 5,499-க்கும், டெக்லைப் பவர் பேங்க் ரூ. 2,799-க்கும் கிடைக்கும் என ரியல்மி இந்தியா அறிவித்துள்ளது.

















