March 29, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வறண்ட நிலத்தில் பழச்சோலை வேடசந்தூரில் மலைப்பிரதேசப் பழங்களைப் பயிரிட்டு ஓய்வுபெற்ற ஆசிரியர்  சாதனை

by sowmiarajan
December 24, 2025
in News
A A
0
வறண்ட நிலத்தில் பழச்சோலை வேடசந்தூரில் மலைப்பிரதேசப் பழங்களைப் பயிரிட்டு ஓய்வுபெற்ற ஆசிரியர்  சாதனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் என்றாலே வறட்சிக்குப் பெயர்போன பகுதி என்றும், அங்கு கம்பு, சோளம், நிலக்கடலை போன்ற மானாவாரிப் பயிர்களைத் தவிர வேறொன்றும் விளையாது என்ற பிம்பத்தையும் உடைத்தெறிந்துள்ளார் 65 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியர் ஏழுமலை. வெரியம்பட்டி அருகே கருவேல முட்கள் அடர்ந்து, ஆடு மாடுகள் மேயும் தரிசு நிலமாகக் கிடந்த தனது 12 ஏக்கர் நிலத்தை, இன்று பலவகை அரிய பழங்கள் விளையும் பசுமைப் பூங்காவாக மாற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், பாரம்பரிய விவசாயத்தை விட மாற்றுக் கொள்கையுடன் புதிய முயற்சியில் இறங்கிய ஏழுமலை, தனது நிலத்தைச் சீரமைத்து, பயன்பாடற்றுக் கிடந்த கிணற்றில் போர்வெல் அமைத்து நீர் ஆதாரத்தைப் பெருக்கினார். பொதுவாக விவசாயிகள் பயிரிடும் நெல், சோளம் ஆகியவற்றைத் தவிர்த்து, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்குப் பயணித்து அரிய வகை மரக்கன்றுகளைத் தேடிப்பிடித்து கொண்டு வந்து தனது தோட்டத்தில் நட்டுள்ளார்.

தற்போது அவரது தோட்டத்தில் நெல்லி, ஸ்டார் புரூட் (Star Fruit), கமலா ஆரஞ்சு, சைனீஸ் ஆரஞ்சு, கொய்யா, வாட்டர் ஆப்பிள், அவகோடா (Avocado) மற்றும் வியட்நாம் சிவப்பு பலா, மலேசியன் தேன் பலா என 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் விளையக்கூடிய 60 வகையான பழ மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. சொட்டுநீர் பாசன முறையைப் பயன்படுத்தி பராமரிக்கப்பட்டு வரும் இந்தத் தோட்டத்தில், குறிப்பாக மலைப்பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடிய வாட்டர் ஆப்பிள் மரத்தில் சுமார் 400 கிலோ மகசூல் எடுத்து திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரம் சந்தைகளில் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளார். அசாத்திய துணிச்சலுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியின் மூலம் நெல்லி, தென்னை மற்றும் அவகோடா பழங்களும் தாராளமாக மகசூல் தரத் தொடங்கியுள்ளன. “மலைப்பிரதேசப் பழங்களை நம் சமவெளிப் பகுதிகளில் பயிரிட்டால் என்ன என்ற தேடலே இந்த வெற்றிக்குக் காரணம்” எனக் கூறும் ஆசிரியர் ஏழுமலை, இன்னும் சில ஆண்டுகளில் மகசூலை அதிகப்படுத்தி சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்குப் பழங்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளார். வறண்ட நிலத்தையும் வருமானம் தரும் சோலையாக மாற்ற முடியும் என்பதை நிரூபித்துள்ள இவரது அசாத்திய திறமையைச் சுற்றுவட்டார விவசாயிகளும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

Tags: agriculturalaridetiredstory vedasandursuccessteacher
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இருளில் மூழ்கும் திண்டுக்கல் நுழைவு வாயில்கள்  தொடரும் வழிப்பறி அச்சத்தால் பொதுமக்கள்

Next Post

சத்தீஸ்கர் தேசிய வூஷூ சாம்பியன்ஷிப் போட்டி  பதக்க வேட்டைக்கு திண்டுக்கல் வீரர்கள் உற்சாகப் பயணம்

Related Posts

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
News

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு
News

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்
News

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை
Bakthi

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026
Next Post
சத்தீஸ்கர் தேசிய வூஷூ சாம்பியன்ஷிப் போட்டி  பதக்க வேட்டைக்கு திண்டுக்கல் வீரர்கள் உற்சாகப் பயணம்

சத்தீஸ்கர் தேசிய வூஷூ சாம்பியன்ஷிப் போட்டி  பதக்க வேட்டைக்கு திண்டுக்கல் வீரர்கள் உற்சாகப் பயணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மேட்டுப்பாளையம் குமரபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்  மாவட்ட அறங்காவலர் தொடங்கி வைத்தார்!

மேட்டுப்பாளையம் குமரபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்  மாவட்ட அறங்காவலர் தொடங்கி வைத்தார்!

January 8, 2026
கண்கொடுத்தவனிதம் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22000 சதுரஅடி இடத்தை காவல்துறை அதிரடியாக மீட்ட அறநிலையத்துறை

கண்கொடுத்தவனிதம் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22000 சதுரஅடி இடத்தை காவல்துறை அதிரடியாக மீட்ட அறநிலையத்துறை

December 17, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 04, 2025 (வியாழக்கிழமை)

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 04, 2025 (வியாழக்கிழமை)

December 4, 2025
திருவாரூரில் மிக கனமழையால் -20க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் அவதி

திருவாரூரில் மிக கனமழையால் -20க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் அவதி

December 3, 2025
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

0
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

0
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

0
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

0
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026

Recent News

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.