December 26, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பணி நிரந்தரம் கோரி நாமக்கல்லில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்

by sowmiarajan
December 25, 2025
in News
A A
0
பணி நிரந்தரம் கோரி நாமக்கல்லில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்கள், தங்களது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக் கோரி 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர் பணிப் புறக்கணிப்பு மற்றும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள போர்டிகோ பகுதியில், தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கம் சார்பில் கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டது.

நேற்று இந்தப் போராட்டம் நான்காவது நாளாக நீடித்தது. போராட்டத்திற்குச் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சவுமியா தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற செவிலியர்கள், கைகளில் கோரிக்கை பதாகைகளை ஏந்தியும், அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பியும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். குறிப்பாக, பல ஆண்டுகளாகத் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ‘சம வேலைக்குச் சம ஊதியம்’ என்ற அடிப்படையில் ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க வேண்டும், காலிப் பணியிடங்களை முன்னுரிமை அடிப்படையில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 முக்கியக் கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.

கொரோனா பேரிடர் காலத்தில் உயிரைப் பணையம் வைத்துப் பணியாற்றிய தங்களுக்கு, அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகப் போராட்டக் குழுவினர் வேதனை தெரிவித்தனர். “குறைந்த ஊதியத்தில் அதிக பணிச்சுமையுடன் பணியாற்றி வருகிறோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்தப் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் தொடரும்,” என ஒருங்கிணைப்பாளர் சவுமியா உறுதியுடன் தெரிவித்தார்.

தொடர்ந்து நான்கு நாட்களாகச் செவிலியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதால், மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்நோயாளிப் பிரிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டு, மருத்துவச் சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. நோயாளிகளின் நலன் கருதியும், செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை உணர்ந்தும் தமிழக அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்திப் சுமுகத் தீர்வு காண வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறை அதிகாரிகளும் போராட்டக் களத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தாதது செவிலியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: EMPLOYMENTNamakkalnursesprotestsit-in permanent
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பள்ளிப்பாளையம் பேருந்து நிலைய மேற்கூரை விவகாரம்: மதுபானப் புகாரால் பரபரப்பு!

Next Post

நாகையில் அடிப்படை வசதி கோரி மீனவர்கள் விஸ்வரூபப் போராட்டம் 

Related Posts

வெளிநாடுகளிலிருந்து செட்டிநாட்டிற்கு வந்து 60-க்கும் மேற்பட்ட நகரத்தார் பாதயாத்திரை துவக்கம்!
News

வெளிநாடுகளிலிருந்து செட்டிநாட்டிற்கு வந்து 60-க்கும் மேற்பட்ட நகரத்தார் பாதயாத்திரை துவக்கம்!

December 25, 2025
பால் பிடிக்கும் தருணத்தில் கருகும் நெற்பயிர்கள் வைகை நீருக்காக ஏங்கும் விவசாயிகள்!
News

பால் பிடிக்கும் தருணத்தில் கருகும் நெற்பயிர்கள் வைகை நீருக்காக ஏங்கும் விவசாயிகள்!

December 25, 2025
மானாமதுரையில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மோதலால் பயணிகள் தவிப்பு!
News

மானாமதுரையில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மோதலால் பயணிகள் தவிப்பு!

December 25, 2025
தேவகோட்டையில் பராமரிப்பின்றி பாழாகும் அரசு கட்டடங்கள் பொதுமக்கள் வேதனை!
News

தேவகோட்டையில் பராமரிப்பின்றி பாழாகும் அரசு கட்டடங்கள் பொதுமக்கள் வேதனை!

December 25, 2025
Next Post
நாகையில் அடிப்படை வசதி கோரி மீனவர்கள் விஸ்வரூபப் போராட்டம் 

நாகையில் அடிப்படை வசதி கோரி மீனவர்கள் விஸ்வரூபப் போராட்டம் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
அரசுப்பேருந்தால் கோர விபத்து – இப்படியும் இறப்பு வருமா?

அரசுப்பேருந்தால் கோர விபத்து – இப்படியும் இறப்பு வருமா?

December 25, 2025
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்தது – கலக்கத்தில் நகை வாங்குவோர்

December 25, 2025
200ஆண்டு பழமையான புனித சூசையப்பர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்… முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வாழ்த்து

200ஆண்டு பழமையான புனித சூசையப்பர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்… முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வாழ்த்து

December 25, 2025
நொடியில் நிகழ்ந்த பேருந்து விபத்து, 11 பேர் உயிரிழப்பு – பிரதமர் இரங்கல்

நொடியில் நிகழ்ந்த பேருந்து விபத்து, 11 பேர் உயிரிழப்பு – பிரதமர் இரங்கல்

December 25, 2025
வெளிநாடுகளிலிருந்து செட்டிநாட்டிற்கு வந்து 60-க்கும் மேற்பட்ட நகரத்தார் பாதயாத்திரை துவக்கம்!

வெளிநாடுகளிலிருந்து செட்டிநாட்டிற்கு வந்து 60-க்கும் மேற்பட்ட நகரத்தார் பாதயாத்திரை துவக்கம்!

0
பால் பிடிக்கும் தருணத்தில் கருகும் நெற்பயிர்கள் வைகை நீருக்காக ஏங்கும் விவசாயிகள்!

பால் பிடிக்கும் தருணத்தில் கருகும் நெற்பயிர்கள் வைகை நீருக்காக ஏங்கும் விவசாயிகள்!

0
மானாமதுரையில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மோதலால் பயணிகள் தவிப்பு!

மானாமதுரையில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மோதலால் பயணிகள் தவிப்பு!

0
தேவகோட்டையில் பராமரிப்பின்றி பாழாகும் அரசு கட்டடங்கள் பொதுமக்கள் வேதனை!

தேவகோட்டையில் பராமரிப்பின்றி பாழாகும் அரசு கட்டடங்கள் பொதுமக்கள் வேதனை!

0
வெளிநாடுகளிலிருந்து செட்டிநாட்டிற்கு வந்து 60-க்கும் மேற்பட்ட நகரத்தார் பாதயாத்திரை துவக்கம்!

வெளிநாடுகளிலிருந்து செட்டிநாட்டிற்கு வந்து 60-க்கும் மேற்பட்ட நகரத்தார் பாதயாத்திரை துவக்கம்!

December 25, 2025
பால் பிடிக்கும் தருணத்தில் கருகும் நெற்பயிர்கள் வைகை நீருக்காக ஏங்கும் விவசாயிகள்!

பால் பிடிக்கும் தருணத்தில் கருகும் நெற்பயிர்கள் வைகை நீருக்காக ஏங்கும் விவசாயிகள்!

December 25, 2025
மானாமதுரையில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மோதலால் பயணிகள் தவிப்பு!

மானாமதுரையில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மோதலால் பயணிகள் தவிப்பு!

December 25, 2025
தேவகோட்டையில் பராமரிப்பின்றி பாழாகும் அரசு கட்டடங்கள் பொதுமக்கள் வேதனை!

தேவகோட்டையில் பராமரிப்பின்றி பாழாகும் அரசு கட்டடங்கள் பொதுமக்கள் வேதனை!

December 25, 2025

Recent News

வெளிநாடுகளிலிருந்து செட்டிநாட்டிற்கு வந்து 60-க்கும் மேற்பட்ட நகரத்தார் பாதயாத்திரை துவக்கம்!

வெளிநாடுகளிலிருந்து செட்டிநாட்டிற்கு வந்து 60-க்கும் மேற்பட்ட நகரத்தார் பாதயாத்திரை துவக்கம்!

December 25, 2025
பால் பிடிக்கும் தருணத்தில் கருகும் நெற்பயிர்கள் வைகை நீருக்காக ஏங்கும் விவசாயிகள்!

பால் பிடிக்கும் தருணத்தில் கருகும் நெற்பயிர்கள் வைகை நீருக்காக ஏங்கும் விவசாயிகள்!

December 25, 2025
மானாமதுரையில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மோதலால் பயணிகள் தவிப்பு!

மானாமதுரையில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மோதலால் பயணிகள் தவிப்பு!

December 25, 2025
தேவகோட்டையில் பராமரிப்பின்றி பாழாகும் அரசு கட்டடங்கள் பொதுமக்கள் வேதனை!

தேவகோட்டையில் பராமரிப்பின்றி பாழாகும் அரசு கட்டடங்கள் பொதுமக்கள் வேதனை!

December 25, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.