வேடசந்தூர் தொகுதிக்கு ₹6.90 கோடி ஒதுக்கீடு!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், சுமார் ரூ.6 கோடியே 90 இலட்சம் மதிப்பீட்டில் நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிக்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். காந்திராஜன் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு பணிகளைத் துவக்கி வைத்தார். வேடசந்தூர் வட்டம் மூக்கையகவுண்டனூரில் நடைபெற்ற இந்த விழாவில், இந்தப் பிரதான திட்டத்தின் முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன.

சுமார் ரூ.6 கோடியே 90 இலட்சம். நல்லமனார்கோட்டை, மாரம்பாடி நெடுஞ்சாலை ரோட்டிலிருந்து தொடங்கி, மூக்கையகவுண்டனூர், அருப்பம்பட்டி, முனியம்பட்டி, கெட்டியபட்டி, கீழ்மாத்தினிபட்டி வழியாக மேல்மாத்தினிபட்டி வரை செல்லும் சாலையாகும். மொத்தமாக 5.5 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. சாலை அகலப்படுத்தும் பணியுடன் சேர்த்து, இந்தப் பாதையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், நீர் வழித்தடங்களைக் கடக்கவும் ஏதுவாக 10 புதிய பாலங்கள் அமைக்கும் பணியும் இதில் அடங்கும்.

மூக்கையகவுண்டனூரில் நடைபெற்ற பூமி பூஜை விழாவில், சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். காந்திராஜன் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இந்தப் பணி நிறைவடைந்தால், வேடசந்தூர் தொகுதியின் போக்குவரத்து உள்கட்டமைப்பு பலமடைந்து, பல கிராமங்களின் மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவில் துறைசார்ந்த சிறப்பு அரசு அதிகாரிகள், ஒன்றிய மற்றும் பேரூராட்சி கழகச் செயலாளர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், கழக மாவட்ட, ஒன்றிய, பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலரும் திரளாகப் பங்கேற்று இந்தச் சிறப்பான நிகழ்வைக் கொண்டாடினர்.

புதிய பாலங்கள் மற்றும் அகலப்படுத்தப்படும் சாலைகள் மூலம் இப்பகுதிகளில் பயண நேரம் குறைவதுடன், சரக்கு வாகனப் போக்குவரத்தும் எளிமையாகும்.

Exit mobile version