அதிவேக சதத்துடன் வரலாறு படைத்தார் 14 வயது வைபவ் சூர்யவன்ஷி !

இங்கிலாந்து அணிக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் தொடரில், இந்தியாவின் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிவேக சதம் அடித்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இவ்வீட்டில் பிரீமியர் லீக் தொடரின் வாயிலாக பரிசுபெற்ற வைபவ், ராஜஸ்தான் அணிக்காக ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரர். அந்தத் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக 38 பந்துகளில் சதம் அடித்திருந்த இவர், இப்போது இந்தியா U-19 அணிக்காக விளையாடி வருகிறார்.

சமீபத்தில் நடந்த இங்கிலாந்து U-19 அணிக்கு எதிரான தொடரில், முதல் போட்டியில் 48 ரன்களும், இரண்டாவது போட்டியில் 45 ரன்களும் எடுத்த வைபவ், மூன்றாவது போட்டியில் வெறும் 31 பந்துகளில் 86 ரன்கள் குவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதில் 20 பந்துகளில் அரைசதத்தை கடந்ததன் மூலம், அதிவேக அரைசதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். முதல் இடத்தில் இந்திய வீரர் ரிஷப் பன்ட் (18 பந்துகள்) தொடர்ந்தும் உள்ளார்.

இந்த வரிசையில், நான்காவது ஒருநாள் போட்டியில் 52 பந்துகளில் சதம் அடித்து, வைபவ் சூர்யவன்ஷி புதிய சாதனையைப் படைத்தார். இதன்மூலம், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த வீரராகப் பெயர் பெற்றார். இதற்கு முந்தைய சாதனை, பாகிஸ்தான் வீரர் காம்ரான் குலாமின் 53 பந்துகளிலான சதமாகும்.

மேலும், 78 பந்துகளில் 143 ரன்கள் விளாசி ஆட்டமிழந்த வைபவ், தனது இனிமையான ஆட்டத்தால் ரசிகர்களையும், முன்னாள் வீரர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார். இதில் 9 பவுண்டர்களும், ஒரு சிக்சும் அடங்கும்.

ஒரு செய்தி… ஒரு சாதனை… வைபவ் சூர்யவன்ஷி என்ற பெயர் இப்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களில் ஒலிக்க தொடங்கியுள்ளது !

Exit mobile version