மகாலட்சுமியின் அருள் பெற 12 முக்கிய வழிகள்!

மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை பட்டாலே, எல்லா வளங்களும் கிட்டும் என்று நம்பப்படுகிறது. லட்சுமியின் அருள் பெற சில பண்புகளை வாழ்க்கையில் கடைபிடிப்பது அவசியம்.

நிபுணர்கள் கூறுவதாவது, லட்சுமியின் அருள் பெற பின்வரும் 12 வழிகளை கடைபிடிக்க வேண்டும் :

  1. தன்னம்பிக்கையும், தெய்வநம்பிக்கையும் கொண்டிருக்க வேண்டும்.
  2. சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும்.
  3. காலத்தை கண் இமைப்போல் மதிக்க வேண்டும்.
  4. வரும் சந்தர்ப்பங்களை நழுவவிடக்கூடாது.
  5. செயல்களை உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும்.
  6. தகுதியான பெரியவர்களிடம் அறிவுரை பெற வேண்டும்.
  7. செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும்.
  8. திட்டமிட்ட செலவினத்தையும் சிக்கனத்தையும் கடைபிடிக்க வேண்டும்.
  9. தொழிலில் உயர்வு-தாழ்வுகளைப் பொருட்படுத்தக் கூடாது.
  10. லாபத்தில் மகிழ்ச்சியோ, நஷ்டத்தில் வருத்தமோ அடையக் கூடாது.
  11. சுயநலத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்.
  12. எந்த சூழலிலும் கடன் வாங்கக் கூடாது.

மேற்கண்ட பண்புகளை கடைபிடிப்பவர்களே, மகாலட்சுமியின் அருளைப் பெற்று வளமுடன் வாழ முடியும்.

Exit mobile version