கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பிரசித்தி பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் விசாக பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவிற்காக அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு வகையான பூஜைகள் நடத்தப்பட்டு பஞ்ச வாத்தியம் வேத மந்திரங்கள் முழங்க திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது. இந்த விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழா நாட்களில் தினம்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் தீபாராதனை, மற்றும் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வருகிற எட்டாம் தேதி ஒன்பதாம் நாள் திருவிழா அன்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது . பத்தாம் திருவிழா அன்று அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் நாகர்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி மாநகராட்சி மேயர் கன்னியாகுமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.