பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகை திஷா பதானி. இவர் தமிழில் வெளியான கங்குவா படத்திலும் நடித்து இருந்தார் . இவரது தங்கை தான் குஷ்பு பதானி. இவர்களுடைய தந்தை ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜெகதீஷ் பதானி ஆவர் .குஷ்பு பதானி மற்றும் ஜெகதீஷ் பதானி இருவரும் உத்தரபிரதேசத்தில் உள்ள பரேலியில் வசித்து வருகின்றனர் .
குஷ்பு பதானி தினமும் காலையில் நடைப்பயிற்சி போவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் நேற்று காலை குஷ்பு பதானி வழக்கம்போல நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அருகே இருக்கும் பழைய கட்டிடத்தில் இருந்து குழந்தை அழும் சத்தம் குஷ்பு பதானிக்கு கேட்டுள்ளது .
உடனே சுதாரித்த குஷ்பு அந்த பழைய கட்டிடத்திற்குள்ளே செல்ல முயற்சித்துள்ளார் ஆனால் பாதை எதுவும் சரியாக இல்லாததால் சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் சென்றுள்ளார். உள்ளே சென்ற குஷ்பு அதிர்ந்து போய் உள்ளார் அதற்கு காரணம் 10 மாத குழந்தை ஒன்று காயங்களுடன் உள்ளே இருந்துள்ளது.
குஷ்பு அந்த குழந்தையை காப்பாற்றி தனது வீட்டிற்கு கொண்டு வந்து முதலுதவி அளித்துள்ளார் பின்பு காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக வந்த காவல்துறை குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளது. மேலும் குழந்தையை அங்கு விட்டு சென்றது யார் என்று கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளது. குழந்தையை காப்பாற்றிய குஷ்பு பதானியை பலரும் பாராட்டி வருகின்றனர்.