வெள்ளித்திரையில் பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ் . இவர் திரைப்படங்களிலும் நாயகனாக நடித்து வருகிறார் . இவருக்கு ஸ்ருதி என்ற வழக்கறிஞருடன் திருமணம் முடிந்து 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி பல சர்ச்சையான கருத்துக்கள் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.
இதற்கு காரணம் காஸ்ட்யூம் டிசைனராக இருக்கும் பெண் ஒருவர் மாதம்பட்டி ரங்கராஜை விரும்புகிறார் என்ற தகவல் பரவியது தான் காரணம். இந்த சந்தேகம் எழுவதற்கு காரணமே அந்த பெண் தான். அந்த பெண் ரங்கராஜுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, காதலர் தினத்தில் அவர் தனக்கு கொடுத்த கிப்ட் என்று பதிவிட்டிருந்தார். அத்துடன், தன்னுடைய பெயருக்கு பின்னால் ரங்கராஜ் என்பதையும் சேர்த்து, ரங்கராஜ் தான் தன்னுடைய உயிர் என்றும் போஸ்ட் போட்டிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய மாதம்பட்டி ரங்கராஜ் “என் குடும்பத்தில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. எதுவும் பேச விரும்பவில்லை. அப்படியே பேசியாகணும் என்ற காலகட்டம் வந்தால் அதை நானே பொதுவெளியில் விளக்கமாக சொல்லுவேன்” என்று நச்சென பதில் சொன்னார். எனவே அவர் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.