சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1000க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
தற்போது எட்டாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் ஒரே ஸ்கூட்டியில் , பள்ளி சீருடையில் மாணவர்கள் ஏழு பேர் பயணித்தனர். இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மாணவர்கள் 7 பேர் ஒரே டூவீலரில் அதிவேகத்தில் சென்றது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
மேலும் காவல்துறை மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் பள்ளி மாணவர்களை பைக் ஓட்ட பெற்றோர் அனுமதிப்பது தவறு. மாணவர்களை பைக் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.