சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலைநிறுத்தம் 4 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2024 பிப்ரவரியுடன் ஒப்பந்தம் முடிந்த நிலையில் மீண்டும் புதிய ஒப்பந்தத்தை அறிவிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பரில் ஒப்பந்தம் குறித்து அறிவிப்பு வெளியிட்டும் இறுதி செய்யப்படவில்லை என புகார் எழுந்த நிலையில், சென்னையில் சுமார் 450 மெட்ரோ குடிநீர் ஒப்பந்த லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.